இந்தியா நம் நாடு:
இனக் கலவரங்களால்
பிணக் குவியல்களின் கண்காட்சி
புனித நதிகளோடும் இந்தியாவில்
குருதி நதிகள் குறுக்கிடுகின்றன…
பாலூட்ட வேண்டிய குழந்தைகளுக்கு
மதவெறி எனும் நஞ்ஞூட்டப் படுகின்றன…
மனசாட்சியைக் மறந்து மக்கள்
மாக்களாகி விட்டனர்…
கோயிலும் மசூதியும் மனிதத்தை
மதிப்பதற்க்காகத்தானே தவிர
மதவெறியை வளர்ப்பதற்கல்ல!
மாண்டவர்களின் பட்டியல்
நீண்டுவிடாமல் முற்றுப்புள்ளி இடுவோம்…
அனாதை குழந்தைகளின் அழுகுரல்
காதில் கடப்பாரையை பாய்ச்சுகின்றன…
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
நம் நாட்டிலா…
இந்த அடுக்கடுக்கான கோரச்சம்பவங்கள்!
அன்பே சிவமென்று தெரிந்தும்
நமக்குள் எல்லைக்கோடென்ன?
ஒரேயொரு தாய்தந்தையிலிருந்து
பிறந்த நமக்குள் பாகப்பிரிவினையென்ன?
சாதிக்காக போராடுவதை நிறுத்தி
சாதிக்கப் போராடத் தொடங்குவோம்
ஒற்றுமைத் தாயின் மடியில்
என்றும் இளைப்பாற்வோம்…
பாவைப்பிரியன்
kmss@in.com
