ஒலிநாடாவை பதிவு செய்யலாம் என முயற்ச்சித்தேன் முடியவில்லை அதனால் பாடல் வரிகளை படையலாக்குகிறேன்.
தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜியின் மனத்தை உருக்கும் பாடல் வரிகள்
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே! அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே!
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே! கதி யாரும் இல்லை நபி யாரசூலே! நபி யாரசூலே!
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே! அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே!
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே! கதி யாரும் இல்லை நபி யாரசூலே! நபி யாரசூலே!
அண்ணலே உங்கள் உம்மதோர் என்னும் உரிமை கொண்டாடும் உவகையில் ஆழ்ந்தோம்!
உத்தமரே உமது நெறிமுறை கடந்தோம்! உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்!
உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்! உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்!
நில்லாது போவதை நிலையாக நினைத்தோம்! வல்லோனின் தூதரே வழிகாட்டுவீரே!
கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே!கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே
திருந்தாமல் வாழ்வில் தீமைகள் செய்தோம்! தீர்ப்புசொல்லும் நாளை தேடாமல் மறந்தோம்!
திரைநீங்கி உம்மை தெளிவாக்கும் அன்று பரிந்துரை செய்து துணைக்கரம் நீட்டும்!
நீரில்லை என்றால் அங்கு நிலை என்னவாகும் நெறிவாழும் மதினாபதி வாழும் நாதரே!
கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே! கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே!
எண்ணத்தில் எல்லாம் தன்னலம் பார்த்தோம்! இன்பத்தை தீயோர் வழியினில் ரசித்தோம்!
இதயத்தை வீணோர் கரத்தினில் சேர்த்தோம்! எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்! எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்! சொலாதபோது சுகத்தினில் ஆழ்ந்தோம்! பொல்லாத பாவதீயினில் வீழ்ந்தோம்! கதி யாரும் இல்லை நபி யாரசூலே!

heart melting brother!!!
SUBHAN ALLAH!